போடிநாயக்கனூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் எடப்பாடிக்கு ஆதரவு

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் தீபன் சக்ரவர்த்தி எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அதிமுகவில் உள்ள 2 ஆயிரத்து 665 பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில், 2 ஆயிரத்து 441 பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஓ.பி.எஸ்சின் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர், பழனிசெட்டிபட்டி பேரூர் கழகத்தைச் சார்ந்த பொதுக்குழு உறுப்பினர் தீபன் சக்கரவர்த்தி, இ.பி.எஸ்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

Translate »
error: Content is protected !!