இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிக்கு ஆதரவு

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சி பொது வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ மாரிமுத்து தலைமைச்செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தல் படிவத்தில் ஆதரவு கையெழுத்து இட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரிமுத்து, எதிர்கட்சியின் பொது வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறோம். இவரது வெற்றியின் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்படும். சிறுபான்மையினர், பெரும்பான்மையோர் ஆதரவாக இவர் செயல்படுவார். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக முதலை கண்ணீர் வடிக்கிறது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து தெரிவித்தார்.


Translate »
error: Content is protected !!