சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதியலாம் – ஜெய்பீம் பட விவகாரம்

 

மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிரான புகாரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் வன்னியர் சமூகம் குறித்து பிற மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர் வேளச்சேரி காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்தார்.

ஆனால் நடவடிக்கை இல்லாததால் இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, ஜெய்பீம் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை மே 20-ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!