காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுங்க- திருமாவளவன்

கோவையில், மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள காவல் அதிகாரி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி நினைவுநாளையொட்டி கோவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை தடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினரின் இந்தப்போக்கு கருத்துரிமையை பறிக்கும் செயல் எனவும் கூறியுள்ளார். மதசார்பின்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!