நான்வெஜ் பிரியர்களின் வேண்டுகோளை ஏற்ற தமிழக சுகாதாரத்துறை

அசைவபிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் தடுப்பூசி முகாம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் அன்றைய தினம் பெரும்பாலும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலித்துக்கொண்டால் நான்வெஜ் பிரியர்கள் அசைவம் சாப்பிட முடியவில்லை என்பதால், அசைவப் பிரியர்களின் கோரிக்கையை ஏற்று இனி தடுப்பூசி முகாம் தமிழகத்தில் சனிக்கிழமைதோறும் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!