100 % தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும்

நவம்பர் இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 7-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 7வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நவம்பர் இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும் என்றார்.

Translate »
error: Content is protected !!