இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம்

 

இந்திய பெருங்கடல் – பசுபிக் பெருங்கல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கமாகவுள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம், ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடக்கு வடகிழக்கே 779 கிலோமீட்டர் தொலைவில் பசுபிக் பெருங்கடலில் இன்று காலை 6.53 மணியளவில் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.

மேலும் இந்த நிலநடுக்கம் இந்தோனேசிய நகரங்களின் கட்டிடங்களில் அதிர்வை ஏற்படுத்தியபோதும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!