ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி கையெறி குண்டு தாக்குதல்

 

ஜம்மு-காஷ்மீரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடை மீது தீவிரவாதி கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.  பாரமுல்லா மாவட்டத்தின் தேவன் பாஹ் பகுதியில் புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இங்கு மதுபானம் வாங்க வந்த ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கையெறி குண்டை வீசியுள்ளார். இதில் கடை முழுவதும் உருக்குலைந்து, அங்கிருந்த  ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், சம்பவத்திற்கு ஆளுநர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!