சமாஜ்வாதியை குறை கூற பாஜகவுக்கு தகுதி இல்லை..

திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சமீப காலமாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்று பா.ஜ.க கூறி வருகிறது. இது தான் சனாதான தர்மம் சனாதனத்தை உடைத்து சமத்துவத்தை கொண்டு வந்தது இந்த சமய அறநிலையதுறை என்றார். நேற்று முன் தினம் லக்னோவில் அமித்ஷா பேசி உள்ளார் – சமாஜ்வாதி கட்சி ஜாதியை பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளார் என்ற அவர் நாங்களும் ஜாதியை பார்க்க கூடாது என்று தான் கூறுகிறோம். ஆனால் பா.ஜ.க சமாஜ்வாதியை குறை கூற என்ன தகுதி இருக்கிறது என விமர்சித்தார். ஜனாதிபதி மட்டும் வலிமையானவராக இருந்தால் இந்த பாரதிய ஜனதா கட்சியை கூட கலைக்கலாம் என்ற அவர் அதிமுக போராட்டம் நடத்துகிறார்கள் – வெளிப்படை தன்மை இல்லை என கூறுகிறார்கள் எனவும் ஆனால் அது போன்ற நிலை இல்லை, பெட்ரோலுக்கு 3 ரூபாயை இந்த மாநில அரசு குறைத்துள்ளது என்றார்.

Translate »
error: Content is protected !!