பாஜக தான் முழு காரணம் – கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

 

தான் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பாஜக தான் முழு காரணம் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 51 நாட்கள் சிறையில் இருந்த அவர் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் தான் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பாஜக தான் முழு காரணம் என்றும் பாஜகவை தான் ஆதரிக்காததாலும், அக்கட்சியில் சேர மறுத்ததாலுமே பாஜக தன்னை பழி வாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை மூலம் தன்னை திகார் சிறைக்கு அனுப்பியதாகவும் சாடினார்.

 

Translate »
error: Content is protected !!