எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஓவ்வொறு குழந்தையின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதகவும்,

இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் குழந்தைகள் பிழையின்றி எழுத செய்வதை இலக்காக கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!