வரும் 24 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிகிறார் முதலமைச்சர்

திமுக அரசு அமைந்த பிறகு மாற்றி அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி சந்திக்கிறார்.சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் கோரிக்கைகளை கேட்டறிவார் என எதிர்பார்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் இடம்பெற்றுள்ள சங்க பிரதிநிதிகள் மகேஷ்வரி, தீபக் ஜான்சிரானி உள்ளிட்ட அனைவரும் முதலமைச்சரை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

Translate »
error: Content is protected !!