கோயம்பேடு மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலை – காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 100 அடி சாலை- காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.93 கோடி செலவில்,  4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பணிகள், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளது. இதையடுத்து சென்னை கோயம்பேடு மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

Translate »
error: Content is protected !!