டிரைவர் சாமர்த்தியத்தால் உயிர் தப்பியது யானை

பாலக்காடு – திருநெல்வேலி விரைவு ரயில் (16792) புனலூர், செங்கோட்டை வழியாக மலை சார்ந்த வனப்பகுதிக்குள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை அதிகாலை 01.10 மணிக்கு தென்மலை – எடமன்  ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்தது. அப்போது ரயிலுக்கு முன்பு ரயில் பாதையில் ஒரு யானையை ஓடிக்கொண்டிருந்தது. உடனடியாக இதை கவனித்த ரயில் இன்ஜின் டிரைவர் அவசர பிரேக்கை பிடித்து ரயிலை நிறுத்தினார். பின்பு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மேலும் இரவு நேரத்தில் அந்தப் பகுதியில்  திருநெல்வேலி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16791) மற்றும் சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) ஆகியவை எதிர் திசையில் இருந்து இயக்கப்பட இருந்தது. எனவே இந்த ரயில்களின் இன்ஜின் டிரைவர்களுக்குஅந்தப் பகுதியில் மெதுவாக கவனித்து செல்லும்படி ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

Translate »
error: Content is protected !!