தமிழக வெள்ள பாதிப்பு வேதனை அளிக்கிறது- தமிழிசை

தமிழகத்தில் கடும் மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை காலங்களில் நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

Translate »
error: Content is protected !!