மின்சாரத்துறை அமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மண்டல பகிர்மான பிரிவு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் ஆலோசனையில் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள், சீரற்ற விநியோக பிரச்சனை உள்ள மின்மாற்றிகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 30 நிமிடங்களுக்கு மின் தடை ஏற்பட்ட இடங்கள் ஆகியன குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Translate »
error: Content is protected !!