வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரம்

 

 

21ம் நூற்றாண்டில், நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரமாக வடகிழக்கு மாநிலங்கள் இருக்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அருணாச்சில பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் மாநிலத்திற்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நவீன உள்கட்டமைப்புடன் தேசிய பாதுகாப்பில் அருணாச்சல பிரதேசம் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அம்மாநில மக்களின் தேசபக்தி, சமூக நல்லிணக்க உணர்வு, கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதம், பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தை ஒன்றாக முன்னெடுத்து செல்லும் விதம் ஆகியன தேசத்திற்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!