பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – ஆசிரியர்கள் போராட்டம்

 

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன்பாகவும் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தின் போது ஆசிரியர்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தை முடித்துக்கொண்ட ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தவாறே விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!