200 பவுன் கொள்ளை போனதாக நகைக்கடை உரிமையாளர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி என்ற இடத்தில் லோகநாதன் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை லோகநாதன் கடை அருகே வந்த போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் கடையை திறந்து பார்த்தபோது சுமார் 200 பவுன் தங்க நகையும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணங்கள் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் எஸ் பி பகலவன் தற்போது அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நகை கடைக்கு பின்புறமாக உள்ள சோளக்காட்டில் நகைகள் வைத்திருந்த சில பெட்டிகள் வீசி சென்ற நிலையில் அவற்றுடன் ஒரு சில தங்க நகைகளும் இருந்தது மீட்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!