கொள்ளிடம் வெள்ள நீரில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்

அணைக்கரை அருகே மதகு சாலை கொள்ளிடம் ஆற்றில் நேற்று மீன் பிடிக்க சென்ற நால்வர் வெள்ள நீரில் மாட்டிக்கொண்டனர். அதில்கொளஞ்சிநாதன் என்பவர் மீட்பு படையினர் இரவு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் மற்ற மூவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள நீரில் இறங்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் மாவட்டஆட்சியரின் உத்தரவின் பேரில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவ இடத்திற்கு கூடுதல்ஆட்சியர் சுகப்பித்திறன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த இடத்தில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் அடித்து செல்லப்பட்ட மூவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அணைக்கரை அருகே உள்ள மதன் சாலை பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

Translate »
error: Content is protected !!