தமிழக அரசிடம் காவல்துறையினர் சிக்கி தவிப்பு – முன்னாள் அமைச்சர் விமர்சனம்

குரங்கு கையில் பூ மாலை சிக்கியது போல, தமிழக அரசிடம் காவல்துறையினர் சிக்கி தவிப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர் சனம் செய்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள கன்னிகாபுரத்தில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஜெயக்குமார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பட்டத்து இளவரசரான உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டம் கிடையாது என்றும், அவர் கூட்டத்துடன் சென்று பிரச்சாரம் செய்வார் என்றும் விமர்சித்தார். மேலும் மக்களை சந்தித்தால் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் முதலமைச்சர் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்வதாக கூறினார்.

Translate »
error: Content is protected !!