இன்று பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அனுசரிப்பு

தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த 6ஆம் தேதியன்று சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தார். அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு கீழே, வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் சமூக நீதி உறுதியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர்  இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

இதேபோன்று சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரியாரில் திருவுருவ படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!