இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம்…

தமிழகம் முழுவதும் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனையை படைத்தது.  அதேபோல, கடந்த 19 ஆம் தேதி இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 25 ஆம் தேதி மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் 24 லட்சம் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 4வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் கடந்த 3ம் தேதி 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம்கள் மாலை 7 மணி வரை செயல்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!