கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு நாளை சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.பவானி சாகர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணைக்கு வர பொதுப்பணித்துறை தடைவிதித்துள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாக இருக்கும் என்ற நோக்கில் பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!