சுற்றுலா பயணிகள் அணைக்கட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா பகுதி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதியாகும் தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஆழியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணை அணையின் பின் பகுதியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் தெரிவதால் இதை சுற்றுலா பயணிகள் தூரத்திலிருந்து பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள்
அனைகட்டு பகுதியில் முதலை ஒன்று ஊர்ந்து தண்ணீருக்குள் செல்வது போன்ற வீடியோவை எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆழியார் அணை கட்டு பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் அனைகட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!