நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் உரையாற்றிய திருச்சி சிவா, தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியதை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக தேனி மாவட்டத்தில், இத்திட்டம் அமைவதால் அதன் சுற்றுச்சூழல் மோசமடையும் எனவும், மதிக்கெட்டான் பகுதியில் உள்ள புலிகள் சரணாலயம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வகத்திற்கென கட்டமைப்புகள், சுரங்கப்பாதையை அமைக்கும் பட்சத்தில், அழுத்தம் காரணமாக பாறைகள் உடைப்பு, மேற்கூரைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால் அரிய வகை உயிரினங்களும் அழியும் நிலை இருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

 

 

Translate »
error: Content is protected !!