தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தல்

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தமிழக எம்.பிக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நீட் விலக்கு உள்ளிட்ட சில மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் திரும்ப அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழ எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர். பாலு, தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மே

லும் இப்பிரச்னை தொடர்பாக உள்துறை அமைச்சர் மக்களவையில் பதிலளிக்க  நோட்டீஸ் வழங்கியும், சபநாயகர் கண்டு கொள்ளவில்லை என்றும், இதனை கண்டித்து இரண்டு முறை திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார். நாளையும் இப்பிரச்னையை அவையில் எழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!