3 நாள் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை

3 குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,அமைச்சர் சேகர் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை வந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாட்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் வருகிற 29ஆம் தேதி சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் விஐடி கல்லூரியில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ளும் குடியரசு துணை தலைவர் அதன்பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ளதையடுத்து சென்னை விமான நிலையம்,கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Translate »
error: Content is protected !!