வண்ண பலூன்களை பறக்கவிட்டு பிரதமர் மோடிக்கு வரவேற்பு

 

பல்வேறு திட்டங்களை துவக்க சென்னை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி  வரவேற்கும் விதமாக பெருங்களத்தூரில்  பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்   தலையில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு வரவேற்பு தெரிவித்தனர்.

பிரதமர்நரேந்திர மோடி 26 ம் தேதிக்கு சென்னையில் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு அர்பணிப்பு செய்யவுள்ள நிலையில் பிரதமர் மோடியை பா.ஜ.க சார்பில் வரவேற்கும் விதமாக பெருங்களத்தூரில் பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் தலைமையில் மாவட்ட தலைவர் அ.வேதசுப்பிரமணியம் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் வண்ண பலூன்களை பறக்கவிட்டும், பட்டாசுகளை வெடித்தும் வரவேற்புக்கு மகிழ்சி தெரிவித்தனர்,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்:-

26ம் தேதி சென்னை வரவுள்ள பிரதமர் 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்பணிக்கவுள்ளாதாகவும் அவரை பா.ஜ.க சார்பில் சாலை முழுவதும் கலை நிகச்ச்சிகளுடன் 3 கி.மீ தூரத்திற்கு 5 பேர் வரவேற்கவுள்ளதாக தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!