கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.  செப்டம்பர் மாதத்துடன் இந்தப் பணிகள் நிறைவடைய உள்ளன. இந்நிலையில், கீழடியை அடுத்த அகரம் பகுதியில் நடந்த அகழாய்வுப் பணிகளில் பழங்கால பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், உருண்டை வடிவ கல், வட்டச் சில்லு, இரும்பு ஆயுதம், மண் சக்கரத்தின் ஒரு பகுதி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அகரம் பகுதியில் கடந்த மாதம் 21 அடுக்குகள கண்டுபிடிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!