கொடாநாடு கொலை வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்…முதல்வர் உறுதி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து பேசிய முதலமைச்சர், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை, சட்டமன்றத்தில் எழுப்பியது தாங்கள் அல்ல என்றும், எதிர்க்கட்சித் தலைவர் தான், முதலில் பேசியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை எவ்வித இடையூறுகள் வந்தாலும், தொடர்ந்து நடத்துவோம் என்றும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்கள் யாராக இருந்தாலும் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதிபடக்கூறினார்.

Translate »
error: Content is protected !!