தலைநகரில் இன்றுமுதல் அனைத்து தடத்திலும் மெட்ரோ ரெயில்

தலைநகர் டெல்லியில் இன்றுமுதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து சுமார் 5 மாதங்களாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தற்போது அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது பஸ் மற்றும் ரயில் போக்கு வரத்து தொடங்கப் பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப் பட்டுள்ளது. கடந்த ஏழாம் தேதி முதற்கட்டமாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு தற்போது படிபடிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டெல்லி மெட்ரோ சேவையின் அனைத்து வழித்தடங்களிலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப் படுகின்றன. மேலும் ரயில் சேவை நேரக் கட்டுப்பாடும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!