பயங்கரவாதியால் சுடப்பட்டு பலியான எஸ்.ஐ – சிஆர்பிஎப் சார்பில் இறுதி மரியாதை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் அர்ஷத் அஷ்ரப் மிர்க்கு சிஆர்பிஎப் காவல்துறை சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு காஷ்மீர் பகுதியின் குப்வாரா மாவட்டத்தில் பணியாற்றி வந்த அர்ஷத் அஷ்ரப் மிர் கான்யான் என்ற உதவி ஆய்வாளர் இன்று ஸ்ரீநகரின் கான்யான் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை,பின்புறம் வந்த பயங்கரவாதி ஒருவர் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் அர்ஷத் அஷ்ரப் மிர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலுக்கு சிஆர்பிஎப் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தைரியமான ஒரு அதிகாரியை இழந்து விட்டதாகக் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் கவலையுடன்  தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!