மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர்…கமல்ஹாசன் பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக நடிகர் கமல்ஹாசன் செயல்படுவார் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் கூடியது.

மாநில துணைத்தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் மவுரியா, சந்தோஷ்பாபு, ஸ்ரீபிரியா, கமீலா நாசர், குமாரவேல், முரளி அப்பாஸ், கவிஞர் சினேகன், பொன்னுசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இந்த பொதுக்குழுவில் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு, மக்கள் நீதி மய்யத்தின் சின்னமானபேட்டரி டார்ச்சின்னத்தைப் மீட்ட தலைவருக்கு மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக செயல்படுவார்.

தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, தனித்துக் களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!