வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரெய்டுகளை நடத்தும் திமுக…

நீட் தேர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாததால் அதனை மறைப்பதர்காக, தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் மற்றும் ரெய்டுகள் நடத்துகின்றனர் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெய்ட் நடந்தால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கல் பணி செய்ய மாட்டார்கள் என திட்டமிட்டு திமுக அரசு இந்த ரெய்ட்டை நடத்துகின்றனர். மீண்டும் புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு அதிமுக வை சேர்ந்தவர்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் வலியுறித்தி உள்ளோம். ராஜ்யசபா தேர்தல் முன்னிட்டு கூட்டணி கட்சிகள் இதுவரை எங்களிடம் எந்த  பேச்சு வார்த்தையும்  நடத்த வில்லை என்றார்.

Translate »
error: Content is protected !!