இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,106 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 89 ஆயிரத்து 623 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 38 லட்சத்து 97ரத்து 921ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,28,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 459 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 65 ஆயிரம் 082 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!