உயர்கல்வி உதவித்தொகை திட்ட நிதி விடுவிக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில், பள்ளிக்கு பிறகான கல்வி உதவித் தொகை திட்டத்துக்குரிய நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் 60 % பங்களிப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு நடப்பாண்டிலும் உயர்கல்விக்கு தமிழக அரசு ரூ.2,110.90 கோடியை செலவிடுகிறது. இந்த முழுத் தொகையையும் தமிழக அரசே செலுத்தும்பட்சத்தில், அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும். மத்திய அரசு ரூ.584.44 கோடியை மட்டுமே அளித்துள்ளது.

எனவே, கூடுதல் நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பட்டியலின மாணவர்களுக்கான நிதியையும் மத்திய அரசு ஒருபோதும் குறைக்கக் கூடாது என்று, கடிதத்தில் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!