கல்லூரி பேராசிரியர்களை நேரில் வர வழைக்க கூடாது – தமிழக அரசு உத்தரவு

சென்னை,

பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும் கல்லூரிக்கு நேரில் வர வழைக் கூடாது என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புக்காக பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவழைப்பதாக  புகார் எழுந்த நிலையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கலை, அறிவியல் கல்லூரியில் நிர்வாகிகளுக்கும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பதால் ஆன்லைன் வகுப்புகள் வீட்டிலிருந்தபடியே நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. NAAC சார்ந்த பணிகள் மற்றும் கல்லூரி சார்ந்த பணிகளுக்காகவும் ஆசிரியர்களை வரவழைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!