குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி திடீரென  பதவி விலகினார். இதையடுத்து அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பர்ஷோட்டம் ருபாலா உள்ளிட்டோரில் ஒருவர் அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் புதிய முதலமைச்சரை முடிவு செய்வதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் காந்திநகரில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பூங்கொத்து கொடுத்து  வாழத்து  தெரிவித்தார்.

நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பூபேந்தர் பட்டேல் பதவியேற்க உள்ளார்.

Translate »
error: Content is protected !!