கோவிலை திறக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தேசவிரோத. ஹிந்து விரோத திராவிட முன்னேற்ற கழக அரசானது ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்து சமுதாய பண்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது எனவும், அதன் ஒரு பகுதியாக ஹிந்து திருக்கோயில்களை விடுமுறை நாட்களிலும். பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் பூட்டி வைத்துள்ளது எனவும்,

தமிழகத்தில் கேளிக்கை நிகழ்வுகள், கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள், குளிரூட்டப்பட்ட பொது போக்குவரத்துக்கள், பள்ளி – கல்லூரிகள் என அனைத்தையும் திறப்பதற்கு அனுமதி கொடுத்து விட்டு, வஞ்சகத் தோடு ஹிந்து திருக்கோயில்களை மட்டும் பூட்டி வைத்துள்ளது தமிழக அரசு எனவும்,

இதனை கண்டித்து ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட பாஜக சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் தலைமையில் உள்ளிட்ட 300 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Translate »
error: Content is protected !!