செய்தி துளிகள்…

  • சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மட்டும்,  புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக கால அளவு குறைப்பு.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்!  – சி.டி.ரவி, பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர்.
  • பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்கலாம்’ வருமான வரித்துறை அறிவிப்பு.
  • சென்னை ஆலந்தூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம்.
  • கோவையில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக தி.மு.க. நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்குவதில் ஏற்பட்ட மோதலில்  கூலித்தொழிலாளி பூங்காவனம் கல்லால் அடித்துக் கொலை.
  • கோவையில், வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யா மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யானை பாகன் வினில்குமார் உதவியாளர் சிவ பிரசாத் ஆகியோருக்கு மேட்டுப்பாளையம்  நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
  • வெவ்வேறு காரணங்களை சொல்லி பலரிடம், 49.50 லட்சம் ரூபாய் பணம் பெற்று தலைமறைவான அரசு பள்ளி தலைமையாசிரியை மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
  • தாய்லாந்தில், நகை கடை ஒன்றில் பாதுகாப்புக்காக நிறுத்தியிருந்த நாய், கொள்ளை நாடகத்தை தடுக்காமல் துாங்கி வழிந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
  • உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செங்கல் சூலைகளுக்கு மணல் திருடும் கும்பல் செயல்பட்டு வருகிறது யானைகள் அதிகமாக வலசை செல்லும் பகுதியான ஆனைகட்டி மலைப்பகுதியில் நடந்து வருகிறது.
  • ஓசூர் அருகே காரப்பள்ளி கிராமத்தில் குடிபோதையில் சண்டை போட்ட மகன் பசவராஜ் (35), தந்தை ஜெயப்பாவால் அடித்துக்கொலை – தந்தையும் குடிபோதையில் இருந்ததாக தகவல்
  • மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 98வது நாளாக விவசாயிகள் போராட்டம்.
  • கோவையில் திருமணத்துக்கு சென்றிருந்த ஆட்டோ டிரைவரின் வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 5 பவுன் நகை ஒரு லட்சம் ரொக்கம் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • அமெரிக்காவில் புதிதாக 55,706 பேருக்கு கொரோனா தொற்று. ஒரே நாளில் 1952 பேர் உயிரிழப்பு.
  • ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நீதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு 1,500 கோடி இழப்பு ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் அம்பலம்.
  • பாஜவுடன் ரகசிய பேச்சு நடத்தியதால் சசிகலா- டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • நாட்டறம்பள்ளி அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது திருமாவளவன் அறிக்கை.
  • புத்தகப் பைகளில் ஜெ, எடப்பாடி புகைப்படங்கள் விரைந்த தேர்தல் அதிகாரிகள்.
Translate »
error: Content is protected !!