பாரதிய ஜனதா கட்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் இணைந்தார்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த அருணாச்சலம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார்பாஜகவில் இணைந்த பின்னர் அவர் கூறியது. தொலைநோக்கு சிந்தனையுடன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு விவசாயியாக இது பயனுள்ள திட்டமாகும். புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன். விவசாயிகள் நலன் கருதி பாஜகவில் இணைந்தேன்.

 

 

Translate »
error: Content is protected !!