மார்ச் 30-31.. கேரளாவில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று பிற்பகல் திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம் செய்தார்.

இன்று, நாளையும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வருகிறார். இன்று பிற்பகல் திருவனந்தபுரம், காட்டாக்கடை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

தொடர்ந்து இன்று மாலை வலியதுறை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். வலியதுறையில் பிரசாரம் முடிந்த பின்பு பிரியங்கா, இன்று இரவு திருவனந்தபுரத்தில் தங்குகிறார். நாளை காலை அவர் கொச்சி பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

அங்கிருந்து சாலக்குடி, இருஞ்சாலக்குடா பகுதிகளில் பிரசாரம் செய்தபின்பு திருச்சூர் செல்கிறார். நாளை இரவு திருச்சூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் முடிந்த பின்புஅவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

 

Translate »
error: Content is protected !!