வெளிநாடு புறப்பட்டார் ராகுல்: தனிப்பட்ட பயணம் என காங்கிரஸ் தகவல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறுகிய நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். இன்று அவர் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளார். அவர் எங்கே செல்கிறார், எதற்காக செல்கிறார் என்பதை காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை. இது அவருடைய தனிப்பட்ட பயணம் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!