டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில் மொத்த பாதிப்பு 20 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 20 பேரில் 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி சுகாதார  அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!