ஒரே நாளில் 101 பேருக்கு தொற்று உறுதி…

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 101 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 58 நபர்களுக்கும், காரைக்காலில் 34 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபரும், மாஹேவில் 8 நபர்களுக்கும், என மொத்தம் 101 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 922 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லாததால் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1832 ஆகவே உள்ளது.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,22,864 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை 1,25,618 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!