தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் காலக்கெடு முடிந்தும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள 200 வார்டுகளில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Translate »
error: Content is protected !!