சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

டெல்லி: என்கவுண்டரில் குற்றவாளி உயிரிழப்பு.. 2 போலீசார் காயம்

டெல்லி ரோகினி பகுதியில் உள்ள பேகம்பூர் என்ற இடத்தில் போலீசாருக்கும் குற்றவாளி ஒருவருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் 2 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டரில் குற்றவாளி கொல்லப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.62 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24,62,44,872 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,31,27,382 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் புதிதாக 14,348 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 805 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,198…

அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் – தமிழக அரசு

அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது கோயில் நகைகளை உருக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழக அரசு பதில் அளிக்க கோரி உத்தரவிட்டது.…

இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசாணை

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார் ஆலோசனைக்குழு முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்,…

பேரறிவாளன் அன்னையின் வாழ்க்கை வரலாற்றை இயக்கப் போகும் வெற்றிமாறன்

32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து பேரறிவாளனை விடுவிக்க தனி நபராக போராடி வரும் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அசுரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த அடுத்த…

தமிழகத்தில் இன்று 1,061 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,061 ஆகும். இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர்.  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,072 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், மொத்தம் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,99,554 ஆக உள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள்…

கடந்த 24 மணி நேரத்தில் 45 நபர்களுக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 45 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 45 நபர்களுக்கு கொரோனா…

ஜார்கண்ட்: தேசிய நெடுஞ்சாலையில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – 5 பேர் பலி

ஜார்கண்ட் ஹர்வா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரே பைக்கில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். சிஜோ மோர் பகுதியில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் மீது பைக் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Translate »
error: Content is protected !!