மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம்…

செல்போன் திருடிய இளைஞர்கள் 2 பேர் கைது

புதுச்சேரியில் உள்ள காய்கறி அங்காடியில், பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அரவிந்த்குமார் என்பவர் காய்கறி அங்காடி நடத்தி வருகிறார். இந்த நிலையில், காலை கடைக்கு வந்து பார்த்த போது…

உக்ரைன் தூதரகத்தில் இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுரை

ரஷ்யா – உக்ரைன், போர் பதற்றத்திற்கு இடையே, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்களது விவரங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருவதால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.…

குடியரசு தின கொண்டாட்டம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றிக் கொண்ட இருநாட்டு வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சர்வதேச வாகா எல்லைப் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாபின் வாகா எல்லையிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி எல்லையிலும் இரு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

இரு மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற…

குடிபோதையில் ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்த கும்பல் கைது

சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் குடிபோதையில் ஊருக்குள் புகுந்த கும்பல், வாகனங்களின் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரை ஓடுகளை அடித்து நொறுக்கியது. இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தங்கமாபுரிப்பட்டினம் பகுதியில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் லாரியின் கண்ணாடிகளை…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோர…

தரமற்ற உணவு: விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்த தடை

விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நடப்பதால் அரசுப் பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது கண்டறியப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட உள்ளார்.

குடியரசு தினம் விழாவில் உத்தரகாண்ட் பாரம்பரிய தொப்பி, மணிப்பூர் மாநில துண்டுடன் வந்து அனைவரையும் அசத்திய பிரதமர் மோடி

குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் தலைப்பாகை அணிவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இது பலரால் கவனிக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு முன், தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி…

Translate »
error: Content is protected !!