27.31 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்- ஒருவர் கைது

சாா்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 27.31 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை  பன்னாட்டு விமானநிலையத்திற்கு சாா்ஜாவிலிருந்து  வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சோ்ந்த பயணியிடம் சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை முழு பரிசோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் 4 சிறிய பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சுங்கத்துறை  அதிகாரிகள் பாா்சல்களை பிரித்துப்பாா்த்தபோது, அதனுள் தங்கப்பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

மொத்தம் 555 கிராம் எடை தங்கத்தின் மதிப்பு ரூ.27.31 லட்சம் என்பதால் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!